Pages

வாசகர் வட்டம்

Wednesday, August 04, 2010

கொள்ளி வாய் பிசாசுடன் கொஞ்ச நேரம்


இரவு பத்தரை இருக்கும் இங்கு வீ்ட்டின் பின் பக்கம் அவல குரலுடன் கீச்சிடும் சத்தம் கேட்டு தேய்ந்து .ஓய்ந்தது இந்த குரலை எங்கையோ கேட்டிருக்கிறன். ஆ..அது ஒரு பறவையின் குரல் இந்த வினோதமான குரலை நீண்ட காலத்துக்கு பிறகு கேட்டிருக்கிறன்.ஆ..இதை சுடலை குருவி என்று சொல்லுவினம்..நாடு கடல் மைல்கள் காலங்கள் தாண்டி ஒலித்த இந்த குரல் திரும்ப திரும்ப ஒலித்து பேயறைந்தவன் போல் என்னை ஆக்கி கொண்டிருந்தது

.நீண்ட பரந்த செவ்வக வடிவமுள்ள வயல் பரப்பு பகுதியின் வடகிழக்கு மூலையில் அந்த ஊர் சுடலையும் அடர்ந்த பனங்காணியும், வட மேற் மூலையில் வேப்பமரத்துடனூன வைரவர் கோயிலும் இருக்கு தென் மேற்கு மூலையில் தனித்து விடப்பட்ட மாமரத்து உடனனா பழங்கால வீடும் அதன் பின் சில இடை வெளி விட்டு தான் நெருங்கிய ஊர் மனைகளின் தொடர்ச்சிகள் தொடங்குகின்றன.தனித்து விடப்பட்ட அந்த சுண்ணாம்பும் சீமேந்து கலவையிலான அந்த ஓட்டு வீடு தான் அப்பம்மாவின் வீடு. அவவின் ஒரே பிள்ளையான அப்பர் பல முறை எங்களோடை வந்து இரு என்று கேட்டும் வராமால் பூதம் காத்த மாதிரி கொண்டு வாழ்ந்து கொண்டு வருது.. எங்கட றோட்டுக்கரை வீட்டிலிருந்து உள் ஒழுங்கைகள் ,காணிகளூடான ஒற்றையடி பாதைகளுக்களாலை போனால் உந்த வயல் மூலையிலுள்ள வைரவ கோயிலடியிலை மிதக்கலாம் ஒரு இரண்டு மைல் தானிருக்கு்ம்.

உந்த போகும் வழியில் அருகருகே வீடுகள் குறைவு சில இடங்களில் பத்தைகளாக கவனிப்பாரற்று கிடக்கும் காணிகளின் ஊடாக உந்த ஒற்றையடி பாதை வளைந்து செல்லுகிறது .பகலிலை என்றால் பிரச்சனை இல்லை . பாம்பு வேற விச ஜந்துகள் ஆக்கள் மிதிக்கோணும் நாங்கள் பதம் பார்ப்பம் என்ற மாதிரி போற வழியில் ஓய்வு எடுப்பினம் கொஞ்சம் இருட்டிட்டு என்றால் ரிஸ்க் எடுத்து கொண்டு தான் உதுக்காலை போகோணும்.

வைரவர் கோயிலடி அண்மையிலுள்ள கேணிகட்டில் சில இளைஞர்கள் சிரித்து கும்மாளமடித்து கொண்டிருக்கின்றனர் சில சிறுசுகள் அந்த கோயிலை சுத்தி திரியற பைத்தியத்தின் மேல் கல் எறிந்து வெறுப்பேத்தி விளையாடுகின்றனர்... ஒரு சோலி சொரட்டுக்கும் போகாத சும்மா தன் பாட்டில் புலம்பி திரியும் பைத்தியம். பாவம் அவர்களினது சேட்டைகளில் இருந்து தப்பிக்க படாத பாடு படுகுது. இன்னும் இருளவில்லை இருள முன்னம் கலைந்து விடுவார்கள்.உந்த வேப்ப மரத்தில்
முனி இருக்கு என்று கன காலமாக ஆக்கள் கதைக்கிறவை. கண்டவை கூட இருக்கினமாம் கொஞ்சம் தூரத்திலை சுடலையும் இருக்கிறதாலை பட்டினசபை லைற் கம்பமும் இஞ்சால் பக்கம் இன்னும் வரலை. கொஞ்சம் இருண்டால் காணும் இந்த பிரதேசத்தை பயங்கரமான இடமாக பிரகடபடுத்தி வைச்சுருக்குதுகள் சனங்கள். சங்கு ஊதி மணி அடித்து கேட்கிறது சவ ஊர்வலம் ஒன்று சுடலையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. சிரித்து கும்மாளமடித்த கொண்டிருந்த இளைஞர்கள் அமைதியாகி பின்னு க்கு கைகட்டி ஒரு வித இனம் தெரியாத உணர்வுடன் பார்த்து கொண்டிருக்கின்றனர் . பிரேதத்துக்கு கை காட்ட கூடாதாம் கை காட்டினால் கை அழுகிடுமாம். இப்படி எத்தனை புலுடாவை சொல்லி வைச்சிருக்கினம் சனம்.
இந்த வைரவ கோயிலிலுருந்து அப்பம்மா வீடு வரை ஒரே வெளி ஒரு புறம் வயல் வெளி மறு புறம் சதுப்பு நிலம்... இருளுக்கு முன்னுக்கு போய் இருள முந்தி திரும்பி வர எண்ணி நினைச்சனான் ஆனாலும் இருள் என்னை முந்தி மெல்ல விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்பம்மா வீட்டு முன் மாமர இருட்டு இன்னும் அந்த வீட்டு தனிமையை இன்னும் பயங்கரமாக்கி கொண்டிருந்தது.அப்பம்மாவின் தனிமையை போக்க அவ வளர்க்கும் மாடுகள் தாங்களே தங்கள் முகத்தால் உந்தி கேட்டை திறந்து உள்ளே போகின்றன.லாம்பு வெளிச்சத்தை கொஞ்சம் தூண்டிய படியால் என்னவோ இருளை கிழித்து வந்த வெளிச்சத்த்துடன் வந்த அப்பம்மாவின் குரல்

காடு கழிஞ்ச நேரம் எங்கை திரியிறாய் மோனை.. என்ற படி.. அண்டைக்கு சொன்னான் உந்த சுடலை குருவி கீச்சிடக்கை ஆரோ ஊருக்கிளை மண்டையை போடப்போயினம் என்று நீ நம்பேலை பாத்தியே என்றது ஏளனக்குரலில்
கொஞ்ச காலாமாக பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கிற தாடிக்கார மாமா வின் கதைகளை கேட்டா பிறகு இவவின்ரை மூட கதைகளை நம்பமால் உவவோடை வாதிடுறனான்.. அது தான் இப்ப நிறுவி நெளிச்சு காட்டுது உந்த மனிசி..

நல்லாய் இருட்டிட்டுட்டுட்து.. அமவாசை முன்னிருட்டு வேற.. வரக்க இருந்த சந்தோசம் இப்ப திரும்பக்க இல்லை பயப்பட ஒன்றும் இல்லை என்று உள் மனம் சொல்லிக்கொண்டாலும் வெளி சூழ்நிலைகள் பயத்தை கிளம்பிக்கொட்டி கொண்டிருந்தன. வயலின் அந்த மூலையில் சுடலையில் பனை இடுக்குககாளில் பிணம் எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது.. இவ்வளவு நேரமாக எரிந்து கொண்டிருக்கிறது இன்னும் எரிந்து முடியல்லை .. வாழக்கையில் சில வேளை சில பேர் சில நேரத்தில் சொல்றவை இந்த கட்டை அவ்வளவு கெதியில் வேகாது என்று. உதுவும் அப்படியான கட்டை ஒன்று போலை.

முன்னுக்கு பக்கத்தில் வட்டமாக நெருப்பு மாதிரி சிறிய நெருப்பு அசைந்து வந்து என்னை கடந்து கொண்டிருந்தது. ஆரோ ஒருவர் சுருட்டை பத்தி கொண்டு எதிரான பக்கம் செல்கிறார் போலை அவர் செல்கிற வேகம் செருமல் அவரது பயம் பிராந்தியை எல்லாத்தையும் நல்லாய் காட்டியது..

இப்பொழுது நான் மட்டும் தான் அந்த வெளியில். தூரத்தில் தெரியும் அந்த வைரவர் கோயிலில் பயம் காட்டி எரியும் தூண்டமாணி விளக்கை கடந்து விட்டால் பிரச்சனை இல்லை . அங்காலை போனால் பாம்பு பூச்சிகள் தானே தெரிஞ்ச சாமான்தானே. பயம் இல்லை. தெரியாததுக்கு தானே சரியான பயமாயிருக்கு இந்த மரணம் பேய் பிசாசு முனி எல்லாம் அப்படியான விசயம் தானே.....

பாதையின் மற்ற பக்கத்தில் சதுப்பு நில பக்கத்திலிருந்து உயரமாக நெருப்பு துகள் என்னை நெருங்கி வந்து கொண்டிருந்தது... அப்பம்மா சொல்ற மாதிரி கொள்ளி வாய் பிசாசோ.. வேகமாக ஓட வேகமாக ஓட வேகமாக துரத்துது மெதுவாக நடந்தால் மெதுவாக துரத்துது .. கிறிஸ்ரோபர் அலி நடிக்கும் ட்ரகுலா படங்களில் சிலுவையை காட்டி தப்பிக்கிற மாதிரி... ஏதாவது தேவாரம் பாடி தப்பிக்கலாம் என்று பார்த்தால் பித்தா பிறைசூடி... அங்காலை உள்ள வரிகள் சரியாக ஞாபகம் வர மாட்டுட்டுது.. பக்கத்து வீட்டு மாமா சொன்னவர் மெதேன் என்ற வாயு சதுப்பு நிலங்கள் உருவாகிறது என்று. அதைத்தான் கொள்ளி வாய் பிசாசு என்று சொல்றவை என்று.. உந்த புத்தி வேலை செய்யவில்லை தூண்டாமணி விளக்கடி மட்டும் மூச்சிறக்க ஓடிவந்தேன் .திரும்பி பார்த்தேன் நெருப்பு வெளிச்சத்தை காணவில்லை .

இங்காலை வைரவர் கோயிலடி வேப்பமரத்தடியில் திருப்பி பார்த்தன் ஓர் கரிய உருவம் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தது......... ஹிஹி சிரித்தபடி... வைரவரா , முனியா ...வையந்திமாலாவை கல்யாண கட்ட போறனே. என்றபடி......கேட்ட குரலாக. இருக்கே... அந்த கோயிலை சுத்தி திரிந்த கொண்டிருக்கிற பைத்தியம் அதே தான்..

மீண்டும் அந்த குரல் கேட்க பேயடித்த நிலமையிலிருந்து திரும்ப வைத்தது. தூரத்தில் உள்ள சவக்காலைக்குள் கீச்சு சத்தம் போட்டுக்கொண்டு சென்று கொண்டிருக்கிது அந்த குருவி.


2 comments:

நிலாமதி said...

துப்பறியும் மர்ம நாவல் வாசிக்கிற மாதிரி இருக்கிறது. தொடராக உங்கள் சேவை.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!